குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறை தண்டனை பெற்றிருக்கும் சஞ்சய் தத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு இந்து மகா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் வீர்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை குண்டு வெடிப்பில் 257 அப்பாவி மக்களின் படுகொலைக்கு காரணமான பயங்கரவாத சதி செயலுக்கு துணை போன நடிகர் சஞ்சய்தத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தால் சுப்ரீம் கோர்ட் அவரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அப்படியிருக்கையில் பிரபல நடிகர் என்கிற காரணத்தாலும், நண்பர் என்கிற அபிமானத்தாலும் நடிகர் சஞ்சய்தத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜெயா பச்சன் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளது கண்டிக்கதக்கது. தண்டனை குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம், என்று கூறப்பட்டுள்ளது.