தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சென்னையில் கடந்த மாதம் நடத்திய இசை நிகழ்ச்சி 'மறக்குமா நெஞ்சம்'. அதில் அனுமதிக்கப்பட்ட டிக்கெட்டிற்கும் அதிகமாக விற்று பல ஆயிரம் பேர் கூடியதால் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் விழா அரங்கிற்குள் நுழைய முடியாமல் திரும்பினர்.
பலரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பின் காவல் துறை விசாரணையில் இறங்கியது. அதன்பின் விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ஏஆர் ரஹ்மானும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம், 1500 டிக்கட்டுகளுக்கான கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது. இன்னும் 1000 டிக்கெட்டுகளுக்கு அனுப்ப வேண்டியதை பரிசீலித்து வருகிறோம். அது முடிவடைந்ததும் அப்டேட் தருகிறோம் என்று அறிவித்திருந்தார்கள்.
அந்தப் பதிவில் இன்னமும் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்காதவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ‛‛ஒரு மாதமாகிவிட்டது இன்னும் வரவில்லை, நான் பல முறை மெயில் செய்துவிட்டேன், 2500 பேருக்கு மட்டும்தான் திரும்பவும் தருவீர்களா, 25000 டிக்கெட்டுகளை அதிகமாக விற்றுள்ளீர்கள், 2400 பேருக்கு மட்டும்தான் திரும்பத் தருவீர்களா, எத்தனை மெயில்கள் உங்களுக்கு வந்துள்ளது, யாருக்கெல்லாம் திரும்ப அளித்தீர்கள் சொல்லவும்,” என கமெண்ட் செய்துள்ளார்கள்.