சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992ம் ஆண்டு சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர். குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு எதிரான வழக்கு 30 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை மையப்படுத்தி ஏற்கெனவே சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரானாது. ஓரிரு ஆவண படங்கள் தயாராகின.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை மையப்படுத்தி நடிகை ரோகிணி படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதுகிறார். 'ஜெய்பீம்' பட புகழ் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். ஆந்திராவை சேர்ந்த நடிகை ரோகிணி, தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இருக்கிறார். ஏற்கெனவே பல ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். இப்போது இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.




