ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாள சினிமாவின் சக்தி மிக்க ஆளுமையாக இருப்பவர் மம்முட்டி. 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதிக தேசிய விருது வென்ற நடிகராகவும் இருக்கிறார். சமீபத்தில்கூட அவர் நடித்த 'கண்ணூர் ஸ்குவாட்' என்ற படம் 80 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.
மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் பங்கேற்று மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்பிரீத் வோரா பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் “மம்முட்டி இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடாக திகழ்கிறார். அவரது கலை சேவையை பாராட்டுகிறோம்'', என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வை மம்முட்டி ரசிகர்களும், மலையாளிகளும் கொண்டாடி வருகிறார்கள்.




