அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று புதுடில்லியில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தேசிய விருதுக்குழுவின் ஜுரிகளில் ஒருவராக பொறுப்பு வகித்த மலையாள இயக்குனர் சஜின் பாபு என்பவர் தன்னை இந்த விழாவுக்கு அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார்கள் என பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார். மலையாளத்தில் வரவேற்பை பெற்ற பிரியாணி என்கிற படத்தை இயக்கியுள்ள சஜின் பாபு தேசிய விருதுக்கான படங்களை தமிழகம் மற்றும் மலையாளத்திலிருந்து தேர்ந்தெடுக்கும் குழுவில் ஜூரிகளில் ஒருவராக பொறுப்பேற்று இருந்தார்.
மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட 'நிசித்தோ' என்கிற படமும் தேசிய விருதுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறாமலும் தேசிய விருது கமிட்டி அறிவித்திருந்த சில விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விதமாக இல்லாமல் இருந்ததாலும் தேர்வு குழுவினரால் நிராகரிக்கப்பட்டது.
தேசிய விருதுக்கான படங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சஜின் பாபு, இப்படி ஒரு படத்தை தேசிய விருதுக்கு அனுப்பும்போது அதில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டாமா ? ஒரு நல்ல குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக உருவாகி இருந்தாலும் கூட இது போன்ற சில விஷயங்களால் அந்த படத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போகும் விதமாக அரசு தரப்பிலேயே இப்படி அலட்சியம் காட்டலாமா” என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்படி அவர் ஒரு பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இயக்குனர் சஜின் பாபுவை போனில் அழைத்து இதுபோன்று நீங்கள் பொதுவெளியில் விருதுக்குழு பற்றிய விவரங்களை வெளிப்படையாக பேசுவது தவறு.. இதனால் உங்களது ஜுரி பதவிக்கே ஆபத்து வரலாம் என்று மிரட்டும் தொனியில் கூறினாராம். தற்போது தேசிய விருதுக்குழு கமிட்டியில் தன்னுடன் இடம்பெற்ற மற்ற ஜூரிகள் அனைவருக்குமே இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வந்த நிலையில் தனக்கும் அதுபோல வரும் என காத்திருந்து இறுதிவரை அழைப்பு அனுப்பப்படாததால் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் சஜின் பாபு.
“குறைகளை சுட்டிக் காட்டியதற்காக கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி குழு அதிகாரிகள் தேசிய திரைப்பட வளர்ச்சி கழக அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு அழைப்பு அளிக்காமல் புறக்கணித்துள்ளனர். நான் எந்த தவறான நோக்கத்திலும் என்னுடைய கருத்தை கூறவில்லை. நாளை இதுபோன்று வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் அப்படி கூறினேன்” என்றும் கூறியுள்ளார் சஜின் பாபு. இவரது இந்த பதிவு கேரள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.