'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! |
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடைந்து வருகிறது. இந்த சமயத்தில் இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா சமீபத்தில் பத்திரமாக இந்தியா திரும்பினார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில் வெளியான அகெல்லி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் கதாநாயகனாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஷாய் ஹலேவி என்பவர் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இஸ்ரேல் மற்றும் பிரெஞ்ச் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன்முதலாக அகெல்லி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தனது நாட்டு ராணுவத்தில் இணைந்து ஹமாஸ் போரில் ஈடுபட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அகெல்லி படத்தின் தயாரிப்பாளர் நினத் வைத்யா உறுதிப்படுத்தியுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறும்போது, “இஸ்ரேலில் தற்போது போர் நிலவரம் தீவிரமாக இருப்பதால் ஷாய் ஹலேவியின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் விதமாக அவரை தொடர்பு கொண்டபோது தனது நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்” என்று கூறியுள்ளார் ஒரு நடிகர் ராணுவ வீரராக மாறி போரில் பங்கெடுத்து வருவது ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது