சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.




