2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி | ‛அந்த காட்சி'யில் நடிக்க தயங்கிய தியாகராஜன்: நட்புகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார் | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் கவின்? | சல்மான் கானுக்கு வில்லனாக தென்னிந்திய நடிகர்களுக்கு முன்னுரிமை! | ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம் | விஜய் 69வது படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்! | பெங்களூரு போதை விவகாரம், நடிகை ஹேமாவுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள்? | 'சலார் 2' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | ரன்வீர் சிங் - பிரசாந்த் வர்மா படம் புதிய தகவல் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.