'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தமிழ் சினிமாவில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்னொரு பக்கம் நல்ல கதையை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் நிலையிலும் தற்போது ஒரு கதாசிரியராக மாறி ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்காக கதை எழுதி வருகிறார் யோகிபாபு.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. கடல் சார் பின்னணியில் உருவாகும் இந்த திரில்லர் படத்தில் யோகிபாபுவும் அவருடன் இணைந்து முக்கிய இடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். அடுத்ததாக நீங்கள் ஹீரோவாக நடிக்கும் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கும் நமது இரண்டாவது படத்திற்காக ஒரு கதாசிரியராக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் யோகிபாபு.




