என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு இன்னொரு பக்கம் நல்ல கதையை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் நிலையிலும் தற்போது ஒரு கதாசிரியராக மாறி ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்காக கதை எழுதி வருகிறார் யோகிபாபு.
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. கடல் சார் பின்னணியில் உருவாகும் இந்த திரில்லர் படத்தில் யோகிபாபுவும் அவருடன் இணைந்து முக்கிய இடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். அடுத்ததாக நீங்கள் ஹீரோவாக நடிக்கும் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கும் நமது இரண்டாவது படத்திற்காக ஒரு கதாசிரியராக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் யோகிபாபு.