ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி |
சச்சின், சுயம்வரம், அப்பு, பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மோகன் சர்மா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 70 வயதான மோகன் சர்மா தி.நகரில் இருந்து சேத்துப்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடுமையாக தாக்கியது. இது தொடர்பாக மோகன் சர்மா சேத்துபட்டு போலீசில் புகார் செய்துள்ளார். காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன் சர்மா தனக்கு சொந்தமான வீடு ஒன்றை விற்பதற்காக சில தரகர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். இதில் ஒருவர் மூலம் வீட்டை விற்றிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த மற்ற தரகர்கள் கூலிப்படையை ஏவி மோகன் சர்மாவை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மோகன் சர்மா தாக்கப்பட்ட சம்பவம் அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவாகி உள்ளது. இதை வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.