மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வந்தார். கடந்த 2018ல் விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் ஸ்வாதி. இந்த நிலையில் இவருக்கும் கணவர் விகாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளனர் என்றும் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. ஸ்வாதி தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் என்பதும் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஸ்வாதி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'மந்த் ஆப் மது' என்கிற படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வாதியிடம் உங்கள் கணவருடனான விவாகரத்து செய்தி உண்மையா, இல்லையா ? இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்வாதி, “இதுபற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நான் 16 வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன். சினிமாவில் எப்படி நடந்து கொள்வது, பேசுவது என்பது எனக்கு அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இப்போது ஒரு தொழில் முறை நடிகராக எல்லாவற்றுக்கும் நானே சில விதிமுறைகளை வகுத்துள்ளேன். அதன்படி இந்த விஷயத்திற்கும் இப்போது நடைபெறும் நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க போகவில்லை” என்று கூறியுள்ளார்.