அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் ‛வெப்பம், ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைகோ, திருச்சிற்றம்பலம்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‛‛தெலுங்கு சினிமாவில் இதுவரை எனக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால் தமிழில் நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ ஒருவர் என்னை துன்புறுத்தினார்'' என கூறியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. அதேசமயம் எந்த ஹீரோ என நித்யா மேனன் குறிப்பிடாததால் தமிழில் அவர் நடித்த படங்களின் ஹீரோக்களை பட்டியலிட்டு யாராக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபற்றி நித்யா மேனனை தொடர்பு கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‛‛அதுபோன்று ஒருபோதும் நான் எதுவும் சொல்லவில்லை, தவறான தகவல்'' என விளக்கம் அளித்துள்ளார்.