ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் இயக்காமல் இருந்தார். விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருந்த நிலையில் அந்த படம் ட்ராப் ஆனது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. அதை உறுதி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இன்று(செப்., 25) முருகதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன், ‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க நான் காத்திருக்க முடியாது. மிக்க நன்றி சார், மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்,'' என தெரிவித்துள்ளார்.