பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாறியுள்ளார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழ் பட இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லீ ஆகியோர் அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னார்கள். இவற்றில் லிங்குசாமி படத்திற்கு பூஜையெல்லாம் நடந்தது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனிடம் தற்போது அல்லு அர்ஜுன் புதிய படத்திற்கான கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணியில் படம் அமைந்தால் கண்டிப்பாக தெலுங்கு சினிமாவிற்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.