நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவரது 234வது படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாக அறிவிப்பும் வெளியானது. இதனால் இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் தாமதமாகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ‛சைமா' விருது விழாவில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் ‛கமல் 234' பட அப்டேட்டினை கேட்டார். அதற்கு மணிரத்னம், “தயாரிப்பாளரிடம் கேளுங்கள்” என்றார்.
பிறகு அப்படத்தை தயாரிக்க உள்ள கமல் கூறுகையில், “ஒரு நிஜமான ரசிகன் என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார். எந்தப் பதட்டமும் இல்லாமல் நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் பார்த்து வருகிறோம். உங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடிக்கூட அதற்காகதான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம்” எனக் கூறினார்.
மணிரத்னம் - கமல் கடைசியாக 36 வருடங்களுக்கு முன்னதாக ‛நாயகன்' படத்தில் இணைந்திருந்தனர். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.