நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் பேரன் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது காரிலிருந்தே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‛இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், அப்படம் எப்படி வரும்?' என்ற கேள்விகளை செய்தியாளர்கள் முனவைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “எனது 171வது படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான் லோகேஷ் படம் வரும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.