சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் பேரன் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது காரிலிருந்தே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‛இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், அப்படம் எப்படி வரும்?' என்ற கேள்விகளை செய்தியாளர்கள் முனவைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “எனது 171வது படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான் லோகேஷ் படம் வரும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.