சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் பேரன் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது காரிலிருந்தே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‛இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், அப்படம் எப்படி வரும்?' என்ற கேள்விகளை செய்தியாளர்கள் முனவைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “எனது 171வது படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான் லோகேஷ் படம் வரும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.




