நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகன் கடந்த 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதைபோலவே மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சீரியல் நடிகையும் ரவீந்தரின் மனைவியுமான மகாலெட்சுமி, ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ-கிளாஸ் சிறை வழங்கவேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு மனுவில் ரவீந்தரை ஜாமினில் வெளிவிடக்கோரியும் கேட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.