கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகன் கடந்த 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதைபோலவே மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சீரியல் நடிகையும் ரவீந்தரின் மனைவியுமான மகாலெட்சுமி, ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ-கிளாஸ் சிறை வழங்கவேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு மனுவில் ரவீந்தரை ஜாமினில் வெளிவிடக்கோரியும் கேட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.