எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக விழாவிலும் நயன்தாரா கலந்து கொள்கிறார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் புரமோசனுக்காக எடுக்கப்பட்டுள்ள படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
“நயன்தாரா எப்போதுமே திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறவர். தனக்கு வயதாவதை உணர்ந்தும், இனி பட வாய்ப்புகள் குறையும் என்பதை உணர்ந்தும் அவர் தொழில் நுறையில் ஆர்வம் காட்டி வருகிறார்” என்கிறார்கள்.