ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' |

முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக விழாவிலும் நயன்தாரா கலந்து கொள்கிறார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் புரமோசனுக்காக எடுக்கப்பட்டுள்ள படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
“நயன்தாரா எப்போதுமே திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறவர். தனக்கு வயதாவதை உணர்ந்தும், இனி பட வாய்ப்புகள் குறையும் என்பதை உணர்ந்தும் அவர் தொழில் நுறையில் ஆர்வம் காட்டி வருகிறார்” என்கிறார்கள்.




