பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக விழாவிலும் நயன்தாரா கலந்து கொள்கிறார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் புரமோசனுக்காக எடுக்கப்பட்டுள்ள படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
“நயன்தாரா எப்போதுமே திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறவர். தனக்கு வயதாவதை உணர்ந்தும், இனி பட வாய்ப்புகள் குறையும் என்பதை உணர்ந்தும் அவர் தொழில் நுறையில் ஆர்வம் காட்டி வருகிறார்” என்கிறார்கள்.