இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் ‛‛வால்மீகி, அய்யனார், சண்டமாருதம்'' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா நந்தன். கடந்த 2016ல் திடீரென சினிமாவை விட்டு ஒதுங்கி துபாய்க்கு சென்று அங்கே உள்ள பிரபல எப்எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்ற துவங்கினார் மீரா நந்தன். அதன்பிறகு எப்போதாவது ஓரிரு மலையாள படங்களில் மட்டும் வந்து நடித்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போதும் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார் மீரா நந்தன். இந்த நிலையில் தற்போது லண்டனை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் மீரா நந்தன்.
பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தற்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் மீரா நந்தன் திருமணம் பற்றி கூறும்போது, ‛‛திருமணம் செய்யாமல் தனியாக வாழ்வதுதான் தனக்கு பிடித்திருக்கிறது என்றும், தான் திருமணமே செய்யப் போவதில்லை'' என்றும் கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.