போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் |
நடிகை தமன்னா சினிமாவில் நடிப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் என் முகத்தில் பருக்கள் வந்தால் அதற்கென தனியாக சிகிச்சை எதுவும் செய்து கொள்வதில்லை, காலை எழுந்ததும் பிரஷ் பண்ணாமல் வாயில் ஊரும் உமிழ்நீரை தொட்டு வைப்பேன். அதுவாகவே சரியாகி விடும் என்று கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு தோல்மருத்துவ நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் ரஷ்மி ஷர்மா என்பவர் கூறும்போது "இது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. பிரபலங்கள் இதுபோன்ற பரிசோதிக்கப்படாத சிகிச்சை முறைகளை பற்றி பொதுவெளியில் பேசும்போது, மக்கள் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுகிறார்கள். எந்தவொரு தோல் மருத்துவரும் இத்தகைய சிகிச்சையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்" என்கிறார்.
ஆனால் சில நாட்டு மருத்துவர்கள் தங்கள் பதிவில் "தமன்னா சொல்வது சரிதான். மனிதனுடைய உமிழ்நீரில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அது சிறிய வகை புண்களை சரி செய்யக்கூடியது. மருத்துவம் வளராத காலத்தில் மனிதர்கள் காயங்களை ஆற்றுவதற்கு உமிழ்நீரைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.