பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
'கேஜிஎப் 2' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் கன்னட இயக்குனரா பிரசாந்த் நீல். அப்படத்தை அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் விலை எதிர்பார்த்த விலைக்கு அமையவில்லை என்பதால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் எனச் சொன்னார்கள். இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான இரண்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாம். அவற்றின் விலையால் மட்டுமே படத்தின் மொத்த பட்ஜெட்டும் வந்துவிட்டதாம். தியேட்டர் உரிமை, இதர உரிமைகள் ஆகியவை படத்திற்குக் கூடுதல் லாபம் என்கிறார்கள்.
இந்த முக்கிய சிக்கல்கள் தீர்ந்ததால் படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.