பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் சிரஞ்சீவி. நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா, காட்பாதர், வால்டர் வீரய்யா, போலோ சங்கர் என அனைத்து படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அவரது 157வது படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தை யுவி கிரியேஷன் சார்பில் வம்சி கிருஷ்ணா, பிரமோத் உப்பளபதி தயாரிக்கிறார்கள். வசிஷ்டா இயக்குகிறார். சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை மெகா157 என்ற தற்காலிக தலைப்புடன் படத்தின் பணிகள் தொடங்கி உள்ளன. படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.