பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் படம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
'சலார்' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக விலைக்கு சொன்னதால் வினியோகஸ்தர்கள் பலரும வாங்கத் தயங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஓடிடி வெளியீட்டு உரிமை வியாபாரமும் முடிவடையாத காரணம், ஆகியவற்றாலும்தான் பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த தேதியில் படத்தை வெளியிடுவது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட சரியான தேதியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் மாதம் வெளியிடலாமா அல்லது 2024 பொங்கலுக்கு வெளியிடலாமா என வினியோகஸ்தர்களுடனும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.




