நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் படம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
'சலார்' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக விலைக்கு சொன்னதால் வினியோகஸ்தர்கள் பலரும வாங்கத் தயங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஓடிடி வெளியீட்டு உரிமை வியாபாரமும் முடிவடையாத காரணம், ஆகியவற்றாலும்தான் பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த தேதியில் படத்தை வெளியிடுவது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட சரியான தேதியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் மாதம் வெளியிடலாமா அல்லது 2024 பொங்கலுக்கு வெளியிடலாமா என வினியோகஸ்தர்களுடனும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.