நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
மத்திய அரசு நம் நாட்டுக்கு ஆங்கிலேயர்கள் வைத்த 'இந்தியா' என்ற பெயரை மாற்றி பாரம்பரிய பெயரான 'பாரத்' என்று வைக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த நிலையில் நடிகை கங்கனா இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
"மகாபாரத காலத்தில் இருந்தே, குருக்ஷேத்திரப் போரில் பங்கேற்ற அனைத்து ராஜ்ஜியங்களும் பாரதம் என்ற ஒரு கண்டத்தின் கீழ் வந்தன. பாரதம் என்ற பெயர் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இந்தியா என்றால் என்ன?. பழைய ஆங்கிலத்தில் 'இந்தியன்' என்றால் 'அடிமை' என்று அர்த்தம். அதனால் ஆங்கிலேயர்கள் நமக்கும் இந்தியர்கள் என்று பெயரிட்டனர். அதுவே அவர்கள் நமக்கு கொடுத்த புதிய அடையாளம். பழங்கால அகராதியிலும் கூட இந்தியன் என்பதன் அர்த்தம் அடிமை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை சமீபத்தில் மாற்றிவிட்டார்கள். மேலும் இது எங்கள் பெயர் அல்ல, நாங்கள் பாரதியர்கள், இந்தியர்கள் அல்ல."
இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.