சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு |

விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தமிழ்நாடு முழுக்க தனது மக்கள் இயக்கத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார். அமைப்பு ரீதியாக வலுவானதாக அதை மாற்றி உள்ளார். அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை, தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கவும், உள்ளூர் பிரச்சினைகளில் முன்னுக்கு நிற்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக அவரது கவனம் பெண்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசிகர்களை போலவே பெண்களையும் மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட, தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார். வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவகத்தில் அவர்களை சந்தித்து பேசுகிறார். தற்போது விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை திரும்பாவிட்டால் ஆன்லைன் மூலமாக பெரிய திரையில் தோன்றி அவர் பெண் நிர்வாகிகளுடன் பேச ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.




