சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தமிழ்நாடு முழுக்க தனது மக்கள் இயக்கத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார். அமைப்பு ரீதியாக வலுவானதாக அதை மாற்றி உள்ளார். அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை, தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கவும், உள்ளூர் பிரச்சினைகளில் முன்னுக்கு நிற்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக அவரது கவனம் பெண்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசிகர்களை போலவே பெண்களையும் மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட, தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார். வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவகத்தில் அவர்களை சந்தித்து பேசுகிறார். தற்போது விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை திரும்பாவிட்டால் ஆன்லைன் மூலமாக பெரிய திரையில் தோன்றி அவர் பெண் நிர்வாகிகளுடன் பேச ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.