புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஷாரூக்கான் நடிப்பில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படம் ஒரு நேரடி தமிழ் படம் போலவே இங்குள்ள ரசிகர்களிடம் புரமோட் செய்யப்பட்டு வருகிறது. காரணம் இயக்குனர் அட்லீ என்பது மட்டுமல்ல.. நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு என முன்னணி கலைஞர்களும் இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளதால் இந்தப்படம் ஒரு தமிழ் படமாகவே இங்கே களமிறங்குகிறது. அதற்கேற்றபடி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ஷாரூக்கான் கலந்து கொண்டு இதில் பங்காற்றிய தமிழ் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி தள்ளிவிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “ஷாரூக்கான் இந்த படத்தின் படத்தொகுப்பை துவங்கும்போதே என்னிடம் இந்த படத்தில் நீளத்தை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் என்னுடைய காட்சிகளை வெட்டி விடுங்கள். ஆனால் இதில் நடித்துள்ள மற்ற நடிகர்களின் காட்சிகள் எதிலும் கை வைக்க வேண்டாம் என்று ஒரு அன்புக்கட்டளை போட்டு விட்டார்” என கூறினார்.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தாலும் தாங்கள் ரசிகர்களிடம் எளிதில் பிரபலமாகலாம், அதன்மூலம் தங்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும் என நினைக்கும் பல கலைஞர்களின் காட்சிகள் படத்தின் நீளம் கருதி வெட்டி எறியப்படுவது தான் வழக்கம். ஆனால் தேவைப்பட்டால் தனது காட்சிகளை மட்டும் வெட்டுங்கள் என ஷாருக்கான் கூறியுள்ளது. அவர் மற்ற கலைஞர்களின்பால் கொண்டுள்ள அன்பையே அன்பையே வெளிப்படுத்துகிறது.