லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகை அனுஷ்கா மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும், பாலிவுட்டுக்கும் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகுபலிக்கு பிறகு இத்தனை வருடங்களில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அனுஷ்கா. அந்த வகையில் தற்போது 'கத்தனார்' என்கிற படத்தின் மூலம் மலையாளத்திலும் முதல் முறையாக அடியெடுத்து வைக்கிறார் அனுஷ்கா. இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ரோஜின் தாமஸ் இந்த படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் வரும் 2024ல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதே சமயம் இதில் அனுஷ்காவின் பெயரை குறிப்பிட்டு இருந்தாலும் அவரது காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் அதில் ஒரு சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார்கள்