ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளிவந்தது. அதில் தமன்னா, சுனில், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நெல்சன் இயக்கி இருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூலுடன் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 600 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி படத்தின் தயாரிப்பாளர் ரஜினியை நேற்று அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து மலர்கொத்து கொடுத்து நன்றி கூறினார். அதோடு அதிக வசூலுக்கு போனசாக காசோலையும் வழங்கினார். மேலும், ரஜினிக்கு விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ கார் ஒன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. காசோலை தொகை எவ்வளவு என்பதை தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. “வெற்றியை கொண்டாடுகிறோம்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரஜினி உற்சாகமடைந்துள்ளார்.