சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. அதைவிட இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்கிற செய்திகளுக்காகவே இன்னும் பிரபலமானவர். கடந்த 2013ல் நடைபெற்ற மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். அந்த அழகிப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.
அப்போது இறுதிச்சுற்றில் சோபிதாவிடம் அசின் கேள்வி கேட்கும்போது, “கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என அரசாங்கமோ கல்லூரி நிர்வாகமோ நிர்பந்தப்படுத்தினால் உங்களது பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சோபிதா, “ மாணவிகள் உடை அணியும் விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும் அரசாங்கமும் தலையிடக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் கலாச்சார காவலர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் திடீரென வைரலாக பரவி வருகிறது.