மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. அதைவிட இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்கிற செய்திகளுக்காகவே இன்னும் பிரபலமானவர். கடந்த 2013ல் நடைபெற்ற மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். அந்த அழகிப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.
அப்போது இறுதிச்சுற்றில் சோபிதாவிடம் அசின் கேள்வி கேட்கும்போது, “கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என அரசாங்கமோ கல்லூரி நிர்வாகமோ நிர்பந்தப்படுத்தினால் உங்களது பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சோபிதா, “ மாணவிகள் உடை அணியும் விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும் அரசாங்கமும் தலையிடக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் கலாச்சார காவலர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் திடீரென வைரலாக பரவி வருகிறது.