சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படம் ஹிந்தியை தாண்டி அடுத்தபடியாக தமிழில் மிகுந்த கவனம் செலுத்தி புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அட்லீயையும் தாண்டி இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்திருப்பது தான். கூடவே அனிருத்தும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் ஹிந்தியை தாண்டி ஒரு தமிழ் படமாகவே இது புரமோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய்சேதுபதி பேசும்போது, “நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண்ணை விரும்பினேன். எல்லா பெண்களுக்கும் 96 ஜானு போல இப்படி ஒரு கதை இருக்கும். ஆனால் அந்த பெண் ஷாரூக்கான் மீது மிகப்பெரிய காதலில் இருந்தார். அந்த சமயத்தில் என் காதலுக்கு வில்லனாக இருந்தவர் ஷாரூக்கான் கான். அதற்காக அவரை பழிவாங்க நினைத்திருந்தேன். இந்த ஜவான் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது'' என்று கூறினார்.