அண்ணன் ஆக பார்த்தேன்... : மாஸ்டர் மகேந்திரன் வேதனை | கோடையில் ரிலீஸிற்கு தயாராகும் ‛ஒன்ஸ்மோர்' | எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் |

சந்திரலேகா தொடர் நீண்ட நாட்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த தொடர் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் நிறைவடைந்தது. இந்த 6 ஆண்டிலும் இந்த தொடரில் நடித்த இரண்டு கதாநாயகிகளான ஸ்வேதா பண்டேகரும், நாகஸ்ரீயும் இறுதி வரை மாறவில்லை. அதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், வில்லியாக நடித்த நாகஸ்ரீ தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லியாக அருமையாக நடித்திருந்தார். இந்த தொடர் முடிந்த பிறகு ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், நாகஸ்ரீ கன்னடத்தில் பிசியாக சீரியல் நடித்து வருகிறார். அவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நாகஸ்ரீயை சீக்கிரமே தமிழில் கம்பேக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.




