மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மாவீரன் படத்தை அடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நேற்று அவர் தனது 13வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு 2010 ஆகஸ்டு 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் தனது 13 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அதோடு தனது மனைவியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் சந்தோஷ கண்ணீரே என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.