பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இப்போது முன் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிகர், நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா, மாதவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜோதிகா, பிரியங்கா மோகன் என இரு கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளியாகவில்லை. மேலும் இந்த படம் அரசியல் தொடர்பான கதையாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆகவே மல்டி ஸ்டார் படமாக இதை எடுக்க மேற்சொன்ன நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.