ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? |

வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாக இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது. நிலவில் கால் பதித்த 4வது நாடு என்ற பெருமையையும், தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்காக கட்சி, மதம் வேறுபாடுகளை கடந்து அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சாதனை குறித்து ரஜினி தனது டுவிட்டரில் “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயானை தரையிறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனித்த வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம். இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.