நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' |
கொரோனா தாக்கம் வந்த பிறகு ஒரு மொழியில் தயாராகும் மற்ற படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெறுவது அதிகமாகிவிட்டது. தெலுங்கில் தயாரான 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. 'பொன்னியின் செல்வன்' படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ரசிகர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அந்த வருத்தத்தைத் தற்போது 'ஜெயிலர்' படம் போக்கியுள்ளது.
தெலுங்கில் சுமார் 12 கோடிக்கு விற்பனையான 'ஜெயிலர்' படம் பங்குத் தொகையாக மட்டும் 42 கோடியைத் தந்து 30 கோடி ரூபாய் லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் லாபத்தைத் தரும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு கன்னடப் படமான 'காந்தாரா' படம் 27 கோடி ரூபாய் லாபத்தைத் தந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது 'ஜெயிலர்' முறியடித்துள்ளது.