கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழில் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து வந்தாரோ, அதே போல தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உயர்ந்து வந்தவர் சிரஞ்சீவி. இருவரது வளர்ச்சியும் ஒரே கால கட்டத்தில்தான் அமைந்தது. இருப்பினும் வசூல் விஷயத்தில் சிரஞ்சீவியை எப்போதுமே மிஞ்சுபவர் ரஜினிகாந்த்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து அது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மட்டும் இதுவரையிலும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலும் 35 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்து இரு மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.
அதே சமயம் சிரஞ்சீவி நடித்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'போலா ஷங்கர்' படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தப் படத்தின் உலக அளவிலான மொத்த வசூலே 45 கோடியைத் தாண்டவில்லையாம். உலக அளவில் சுமார் 80 கோடிக்கு விற்பனையான இப்படம் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்த போதும் சிரஞ்சீவி தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான 157 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிம்பிசாரா' படத்தை இயக்கிய வசிஷ்டா அந்தப் படத்தை இயக்க உள்ளார்.