‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் ரஜினிகாந்த் எப்படி சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து வந்தாரோ, அதே போல தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உயர்ந்து வந்தவர் சிரஞ்சீவி. இருவரது வளர்ச்சியும் ஒரே கால கட்டத்தில்தான் அமைந்தது. இருப்பினும் வசூல் விஷயத்தில் சிரஞ்சீவியை எப்போதுமே மிஞ்சுபவர் ரஜினிகாந்த்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளிவந்து அது தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மட்டும் இதுவரையிலும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலும் 35 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்து இரு மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.
அதே சமயம் சிரஞ்சீவி நடித்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த 'போலா ஷங்கர்' படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தப் படத்தின் உலக அளவிலான மொத்த வசூலே 45 கோடியைத் தாண்டவில்லையாம். உலக அளவில் சுமார் 80 கோடிக்கு விற்பனையான இப்படம் மூலம் 50 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்த போதும் சிரஞ்சீவி தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படமான 157 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'பிம்பிசாரா' படத்தை இயக்கிய வசிஷ்டா அந்தப் படத்தை இயக்க உள்ளார்.