சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கேடி பில்லா கில்லாடி ரங்கா,மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா காஸண்ட்ரா. இது அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். அதன்படி, 'தனக்கு பட வாய்ப்புகள் இன்றி பெரிதாக நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் சிலரிடம் வாய்ப்புகள் கேட்டேன். அப்போது ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருந்தால் உடனே வாய்ப்பு கிடைக்கும் என்றார். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் அதனால் எனக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதன் பிறகு என் மேனேஜரிடம் தான் கேட்டு தெரிந்துகொண்டேன். ஆனால், அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை நான் எதிர்கொள்ளவில்லை' என மனம் திறந்து தெரிவித்துள்ளார்.




