அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மங்களூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலே தான் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சலார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்த ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து சில மணி நேரங்கள் சலார் பற்றியும் தனது அடுத்த படம் பற்றியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்.