மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் |
ராஞ்சி : ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இமயமலை சென்றார். பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய அவர், முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இமயமலை ஒட்டியள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆக.,16) ரஜினி சென்றார். ராஜ்பவனில், அம்மாநில கவர்னரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த , எனது அன்பு நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான ரஜினிகாந்தை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜார்க்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த அவரை வரவேற்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.