படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ராஞ்சி : ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இமயமலை சென்றார். பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய அவர், முதலில் ரிஷிகேஷ், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இமயமலை ஒட்டியள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்ற அவர், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு நேற்று(ஆக.,16) ரஜினி சென்றார். ராஜ்பவனில், அம்மாநில கவர்னரான தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்த , எனது அன்பு நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த மனிதருமான ரஜினிகாந்தை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜார்க்கண்டின் மாபெரும் மண்ணிற்கு வந்த அவரை வரவேற்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.