ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ' தனி ஒருவன்'. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த பிறகு ஜெயம் ரவி, மோகன் ராஜா சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக இதில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமிக்கு சினிமாவில் செகன்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்தார். இதிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். கடந்த சில வருடங்களாக தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகவுள்ளது என கூறப்பட்டு வந்தாலும் ஏதோ சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என்கிறார்கள் . ஏனெனில், ஆகஸ்ட் 28ம் தேதியில் தான் கடந்த 2015ம் ஆண்டில் இப்படம் வெளிவந்தது. இப்போது அதே தேதியில் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.