புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
மலையாள திரையுலகில் பிஸியான இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் ‛மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2018 என்கிற படம் சூப்பர் ஹிட் ஆனது. பெரும்பாலும் யார் மீதும் எந்த வம்புக்கும் போகாதவர் என பெயர் வாங்கியவர் டொவினோ தாமஸ். ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் டொவினோ தாமஸ் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பரப்பியும் வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசிபியிடம் நேரிலேயே சென்று புகார் அளித்துள்ளார் டொவினோ தாமஸ். அவரது புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பனங்காடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.