எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள திரையுலகில் பிஸியான இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் ‛மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2018 என்கிற படம் சூப்பர் ஹிட் ஆனது. பெரும்பாலும் யார் மீதும் எந்த வம்புக்கும் போகாதவர் என பெயர் வாங்கியவர் டொவினோ தாமஸ். ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் டொவினோ தாமஸ் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பரப்பியும் வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசிபியிடம் நேரிலேயே சென்று புகார் அளித்துள்ளார் டொவினோ தாமஸ். அவரது புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பனங்காடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.