சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தார்கள். ஆனால் அப்போது திடீரென மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்கள்.
இப்படி தனது இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான் ஆறுதல் கூறியிருந்தார். அதோடு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் கொடுத்துள்ளார். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளதாக ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.