கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தார்கள். ஆனால் அப்போது திடீரென மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்கள்.
இப்படி தனது இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான் ஆறுதல் கூறியிருந்தார். அதோடு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் கொடுத்துள்ளார். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளதாக ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.