மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் | கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா | லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? |
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய இரண்டு படங்களும் நெல்சனுக்கு ஹிட்டாக அமைந்த நிலையில், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியடைந்தது. என்றாலும் அதையடுத்து ரஜினி நடிப்பில் அவர் இயக்கி உள்ள ஜெயிலர் படம் ஹிட் அடித்துள்ளது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ரஜினி - விஜய் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய நான்கு படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அதை விரைவில் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார் நெல்சன். மேலும், விஜய்- அஜித்தை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சனும் கூறி இருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.