இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய இரண்டு படங்களும் நெல்சனுக்கு ஹிட்டாக அமைந்த நிலையில், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியடைந்தது. என்றாலும் அதையடுத்து ரஜினி நடிப்பில் அவர் இயக்கி உள்ள ஜெயிலர் படம் ஹிட் அடித்துள்ளது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ரஜினி - விஜய் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய நான்கு படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அதை விரைவில் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார் நெல்சன். மேலும், விஜய்- அஜித்தை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சனும் கூறி இருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.