காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இதயத்தைத் திருடாதே, தென்றல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் நிலானி. காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். போலீஸ் சீருடையில் போலீசுக்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில தன்னிடம் சிலர் நூதன முறையில் மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது : கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் என்னிடம் பேசினார். குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாக சொன்னார். அதை ஆன்லைன் மூலமாக பெறலாம் என்றும் சொன்னார். இதில் வட்டி மற்றும் பிற விவரங்களை கேட்டபோது அந்த நிதி நிறுவன ஊழியர் முதலில் ஆன்லைனில் லாக் இன் பண்ணினால் தான் தெரியும் என கூறினார். அதனால் நான் ஆன் லைனில் லாக் செய்தேன். வட்டி தொகை அதிகமாக இருந்ததால் கடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மெசேஜ் வந்தது. உங்களது லோன் 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டது, அதற்கான வட்டி தொகை 10,998 ரூபாய் கட்டுங்கள் என்று அந்த மெசேஜ் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நிதி நிறுவன மேலாளரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் மிரட்டினார். எனது வங்கி கணக்கில் இருந்து 10,998 ரூபாய் எடுத்துள்ளனர். கார் லோன் வாங்காமலேயே இது போன்ற நூதன மோசடியை நிதி நிறுவனம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.