6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி |

இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். மேலும், அதே தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக காட்டி வருகின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் தான் ஹீரோவா? க்ளைமாக்ஸில் அவரும் ஈஸ்வரியும் ஒன்று சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள திருச்செல்வம், 'ஆரம்பத்தில் ஜீவானந்தம் கதாப்பத்திரம் சில நாட்களுக்கு என்று தான் தொடங்கப்பட்டது. இப்போது கதையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பயணிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் கதையின் போக்கு மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடரும். ஆனால், அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது' என்று கூறியுள்ளார்.




