இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். மேலும், அதே தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக காட்டி வருகின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் தான் ஹீரோவா? க்ளைமாக்ஸில் அவரும் ஈஸ்வரியும் ஒன்று சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள திருச்செல்வம், 'ஆரம்பத்தில் ஜீவானந்தம் கதாப்பத்திரம் சில நாட்களுக்கு என்று தான் தொடங்கப்பட்டது. இப்போது கதையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பயணிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் கதையின் போக்கு மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடரும். ஆனால், அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது' என்று கூறியுள்ளார்.