காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சின்னத்திரை நடிகை நிலானி தமிழில் சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸ் சீருடை அணிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நிலானிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேசமயம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பிசியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நிலானியின் ரசிகர் ஒருவர் 'எப்போதான் புதுச்சேரிக்கு வருவீங்க. நான் எப்போ நிலானி மக்கள் சேவை இயக்கம்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரியாக்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள நிலானி, 'என்னது மக்கள் இயக்கமா? இதுவரை இதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன். இனிமேல் யோசிக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
இதைபார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்காக நிலானியே இப்படி கமெண்ட் செய்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.