இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல், சினிமா, தொலைக்காட்சி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ஒருவர் 'உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை' என்று கேட்டார். அதற்கு பாத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளி வாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார். இதனால் மிரண்டு போன அந்த நபர் , 'இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கல' என்று சொல்ல. அதற்கும் பாத்திமா பாபு, 'பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?' என காட்டமாக பதிவிட்டார். இதனையடுத்து அந்த நபர் பிரச்னை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.