அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான் எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் தயராக இருக்கும் சைத்ரா, முன்னதாக யாரடி நீ மோகினி தொடரிலும் பேயுடன் சண்டையிடும் காட்சிக்காக கயிற்றில் தொங்கிய படி ரிஸ்க்கான சண்டை காட்சியை சைத்ரா செய்திருந்தார். தற்போது கயல் தொடரின் காட்சிக்காக உண்மையாகவே சைத்ரா ரெட்டி நாள் முழுவதும் கழுத்தில் சுருக்கு கயிறுடன் ஐஸ்கட்டி மீது நின்று நடித்துக் கொடுத்துள்ளார். 2 நிமிடம் ஐஸ்கட்டி தொடர்ந்து கையில் பட்டாலே நம்மில் பலரால் தாங்க முடியாது. ரத்த ஓட்டம் நின்றுவிடும். ஆனால், ஷூட்டிங்கிறாக தொடர்ந்து ஐஸ்கட்டி மேல் நின்று சைத்ரா ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த காட்சியின் மேக்கிங் வீடியோவானது தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் நடிப்பின் மீதான சைத்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.