‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் | 'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். தியேட்டரில் ஓடி முடித்து விட்ட இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் பற்றி பேசினார் மாரி செல்வராஜ். அந்த தேவர் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ரத்னவேல் வேடத்தில் நடித்த பஹத் பாசில் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அவரே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் அவருக்கு எல்லா சாதிக்காரர்களும் ஓட்டு போடுகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சாதி படத்தில் அவர் நடித்தது ரொம்ப தவறு என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.