தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' |
நடிகர் துல்கர் சல்மான் தற்போது தனது கிங் ஆப் கோதா என்கிற படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஓணம் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அதே சமயம் முதன்முறையாக பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் என்பவருடன் ஹீரியா என்கிற ஆல்பம் பாடலில் இணைந்து நடித்துள்ளார் துல்கர் சல்மான். கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த ஆல்பம் வெளியாகி விட்டாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆல்பத்தை புரமோட் செய்து வருகிறார் துல்கர் சல்மான்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆல்பத்தை உங்களுக்கு உதவியாக புரமோஷன் செய்ய வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்..? நித்யா மேனனையா அல்லது மிருணாள் தாக்கூரையா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மிருணாள் தாக்கூர் என்று பதில் அளித்தார் துல்கர் சல்மான். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
காரணம் கடந்த பத்து வருடங்களாக துல்கர் சல்மானுடன் இணைந்து மூன்று படங்களில் கதாநாயகி நடித்துள்ளார் நித்யா மேனன். ஆனால் மிருணாள் தாக்கூர் கடந்த வருடம் வெளியாக சீதாராமம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் துல்கருடன் இணைந்து நடித்துள்ளார். அதனால் நித்யா மேனன் பெயரைத்தான் அவர் சொல்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த துல்கர் சல்மான், “சீதாராமம் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த படம் நான் கனவு கண்டதை விட மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அது ஒரு ஐகானிக் படம்” என்று கூறி சென்டிமென்ட் ஆக மிருணாள் தாக்கூர் பெயரை தான் கூறியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் துல்கர் சல்மான்.