காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சின்னத்திரை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அண்மையில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனைத்தொடர்ந்து ஜோதிடர்கள் தரப்பில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு தக்க பதிலை மாரிமுத்து அளிக்காத பட்சத்தில் அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாரிமுத்து தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் தற்போது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவின் நடிப்பும் ஒன்று. எனவே, அவர் மீது தற்போது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.